RCB vs MI: அதிரடி ஓப்பனர் படிக்கல் விளையாடாதது ஏன்?
மும்பைக்கு எதிரான முதல் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணி வீரர் தேவ்தத் படிக்கல் பங்கேற்கவில்லை. அவருக்கு என்ன ஆச்சு?
rcb
இந்த ஆண்டின் ஐபிஎல் தொடரிலும் அவர் கலக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முதல் போட்டியிலேயே அவர் களமிறங்கவில்லை. காரணம் என்னவென்றால், அவரும் மற்றொரு பெங்களூர் அணி வீரர் டேனியல் சாம்ஸும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதால் ஓய்வளிக்கப்பட்டதாக அணி நிர்வாகம் கூறியுள்ளது. கொரோனா பரிசோதனையில் தேவ்தத் படிக்கலுக்கு கொரோனா இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டுவிட்டது. ஆனாலும், பாதுகாப்பு காரணங்கள் கருதி நேற்றைய போட்டியில் படிக்கலுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 14ஆம் தேதி ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் தேவ்தத் படிக்கல் நிச்சயமாகக் களமிறங்குவார் என்று கேப்டன் விராட் கோலி உறுதிசெய்துள்ளார். அன்று அவரது அதிரடி துவக்கத்தைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்

0 Comments